Total Pageviews

Monday, March 7, 2011

அம்மா


தொப்புள்கொடி அறுபட்ட பிறகு தான் இறுக்கமாய் பிணைக்கப்பட்டது
நம் உறவு............


தோள் கொடுப்பான் தோழன்
தாங்கி நிற்பார் தந்தை
உதவிகள் செய்வர் உற்றார்
உயிர் கொடுப்பது உன்னால் மட்டும் தானே முடியும்.


சிரித்து மகிழ
என்னை சுற்றி ஆயிரம் உறவுகள் நண்பர்கள்
ஆனால் என் கண்ணீற்கு வடிகால்
உன் பாசக் கரங்கள் மட்டுமே................
ஆம்........சோகத்தில் மட்டும் எனக்கு நான்கு கண்கள் அழுவதற்கு
உன் விழிகளையும் சேர்த்து.............


உன் கைகளால் சாப்பிடும் போதெலாம்
தவழும் குழந்தையாகி போகிறேன்


இருப்பவர்கள் உணர்வதில்லை
இழந்தவர்கள் மறப்பதில்லை
தாய்மையின் பெருமையை...........


என் தாய்
சேலை சூடிய நிலவு
பேசும் நந்தவனம்
புன்னகையின் தேவதை
பொறுமையில் கோமாதா
மொத்தத்தில்
தெய்வத்தின் பிரதிபிம்பம்.......

போற்றுவோம் தாய்மையை
மகளிர் தின வாழ்த்துகள்.........

2 comments:

  1. nice to see....where u get these

    ReplyDelete
  2. All these actress send their fotos and request me to keep their fotos in my blogsite.....fans torture thanga mudiyala

    ReplyDelete