உன் பாததடங்களில் முதன் முதலாய் தொடங்கியது
என் மழலை நடை...............
நினைத்து பார்க்கிறேன்
நிலா உறங்கும் வரை நீண்ட நம் உரையாடல்கள்
இரவு நேர தனிமையில் இளையராஜா இசையை உன் குரலால் கொல்லும் கொடுமை (இன்னும் என் காதுகள் வலிக்கின்றன...........)
தவறிழைக்கும் போது எனை எரிக்கும் உன் பார்வை.........
பின் மழலை போல் என் மடியில் உன் உறக்கம்
சின்ன சின்ன ஊடல்கள்
எனை சீண்டி சிரிக்கும் உன் சிற்றின்பம்
என் கோபத்தை மறைந்திருந்து நீ ரசிக்கும் அழகு...........
உன்னுடனான ஒவ்வொரு நிமிடமும் அழகிய கவிதை
தனிமை தருணங்களில் என் விழியோர கண்ணீர் காதுகளுக்குள் சொல்லி சென்றது
Really I miss u ANNA..................
நினைவுகளுடன் உங்கள் கருவாச்சி................