
Total Pageviews
Tuesday, November 30, 2010
loooooooooooooooooove you daddy...................

Monday, November 1, 2010
விருப்பத்துடன் சகித்து கொள்ளுங்கள்

எதையும் நாடி செல்லாதே....................
எதையும் தவிர்க்காதே..............................
வருவதை ஏற்று கொள்
எதனாலும் பாதிக்கபடாமலிருப்பது ஒரு பெறும் சுதந்திரமாகும்.
வெறுமனே சகித்துக் கொண்டிராதே…… பற்றற்றிரு!!!!!!!!!!!!
இன்பம் வரும்………. நல்லது தான்….. யார் தடுக்கிறார்கள்?
துன்பம் வரும்……. அதனையும் வரவேற்போம்............. .
எருதின் கதையை நினைவிற் கொள்ளுங்கள்.
ஓர் எருதினுடைய கொம்பின் மீது ஒரு கொசுவானது நீண்ட
நேரம் உட்கார்ந்திருந்தது.சிறிது நேரம் கழித்து அந்தக் கொசுவுக்கு மனசாட்சி
உறுத்தவே அது “அய்யா எருதாரே!” நான் நெடு நேரமாக இங்கே
உட்கார்ந்திருக்கிறேன். ஒருக்கால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்று
வருந்துகிறேன். போய் விடுகிறேன்” என்று கூறிற்று.
ஆனால் அந்த எருது “ஓ அப்படியோன்றுமே இல்லை. உங்கள் குடும்ப சகிதமாக வந்து என் கொம்பின் மேல் தங்கிப் போங்களேன். நீங்கள் எனை என்ன செய்து விட முடியும் ? என்று பதிலளித்தது.
துன்பம் வரும் போது அதனிடம் நாமும் ஏன் அவ்வாறு கூறக் கூடாது??????