Total Pageviews

Saturday, January 14, 2012

இறைவா.........




வளைந்து வளைந்து பிழைத்து கொள்ளும் 

         நாணலாய் வாழ விருப்பமில்லை.........

அழிவு தான் முடிவெனினும்         

        ஒரு முறையேனும் எதிர்த்து நிற்கும் 

ஆல மரத்தின் உறுதி கொடு .............

நினைவுச்சின்னம் .


உன் புகைப்படத்துக்கு உயிரூட்டி

புன்னகைக்கிறேன்.....

இறந்து போன நம் காதலோடு.........

Tuesday, January 10, 2012

ரணம்.......


"எதை இழந்தாய் நீ அழுவதற்கு"

இழப்பின் வலி உணர்ந்ததில்லை

கீதையின் கண்ணன்……………

இழந்திருப்பின்

உபதேசிக்க துணிந்திருக்க மாட்டான்



 

Saturday, January 7, 2012

காணவில்லை என்னை .......

                                           

தொலைந்து போன முகவரியில்


இதயத்தை தேடும் அகதி நான்.............