Saranya Arumugam
Total Pageviews
Wednesday, June 8, 2011
மீசை ............
என் இரு வரி குறளை(இதழை)
தீட்டிட துடிக்கும் எழுதுகோல்(குழல்)
விழி மொழிகள்
தினமும் சந்திக்கிறோம்.........
நாகரிகமாய் உன் புன்னகை
மௌனமாய் என் வெட்கம்
பண்டமாற்று முறையில் இருவரும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
நம் காதலை............
பசலை
உன் கரங்களுக்குள் சிறைபடுவதற்காகவே
மெலிகிறது என் இடை............
காதல் சாம்ராஜ்யம்
பல கவிஞர்களை தாடியோடு பிரசவித்து
கண்ணீரை பரிசளித்து
தூரமாய் நின்று புன்னகைக்கிறது காதல்......
தோற்றவன் கூட போற்றும் இந்த காதலை
யார் தான் ஒழிப்பது??????
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)