
நான் கரம் பற்றிய முதல் தோழன்...........
"முதன்முதலில் உன் அப்பா தூக்கியதற்கு பிறகு தான் நீ அழவே ஆரம்பித்தாய்"
இன்று வரை சொல்லி சிரிப்பாள் என் தாய் ................
நான் அழும் போது முதன் முதலாய் சிரித்தவரும் அவரே.....
அழுகை வரும் போது சிரிக்க கற்று கொடுத்தவரும் அவரே.!!!!!!!!!
என் முதன் முதல் வெற்றியில்
அவரின் புன்னகைக்கு முன் சிறிதாய் போனது
நான் பெற்ற பரிசு...........
என் தொலை தூர பயணங்களில் பல நேரம் தனிமையை உணர்ந்திருக்கிறேன்
ஆனால் இவ்வளவு நாள்
என் தந்தையின் தோள்களில் தான் பயணித்திருக்கிறேன் என்று இப்போது உணர்கிறேன்.
பத்து மாதம் சுமந்திருகிறாள் தாய்
கடமைபட்டிருக்கிறேன்.
ஆயுள் வரை எனை சுமக்கும் தாயாய் என் தந்தை
கடன்பட்டிருக்கிறேன் .
ஈடு செய்ய இயலா கடன்...........
"விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் ஒருநாள் என் தந்தையோடு தங்க வேண்டும்" என்று
நான் கேட்ட வரத்தில் இன்றும் என்னை மிரட்சியாய் பார்க்கிறார்
எங்கள் ஊர் கருப்பர்(தெய்வம்)............................
என்னோடிருக்கும் அனைவரும் "என்னை அப்பா பைத்தியம்" என்பர்.
உங்கள் நினைவுகளில் எத்தனை முறை பைத்தியமாகவும் நான் தயார்.
கனவுகள் கவிதைகள் உணர்வுகள் உறவுகள் எல்லாம் தாண்டிய ஓர் உலகம்
என் அப்பா...................
அத்தனை விழுதுகளையும் ஆசையாய் சுமந்து நிற்கும் ஆலமரவேர்......
ஆசைபடுகிறேன்.......................
இறுதிவரை உங்கள் கருவிழிக்குள் குடியிருக்கும்
குழந்தையாய் இருக்க...........
எல்லா மொழிகளும் தோற்று விட்டன .......
உங்களுக்கு நிகராய் ஒற்றை வார்த்தை எனக்கு தர முடியாமல்
என்னால் சொல்ல முடிந்தது இது மட்டுமே........................
I loooooooooooooooooove you daddy...............
by
Saranya Arumugam
its real saran...and the flow was good....ivalavu..sonthasa paduthum apava unakunu koduthathu un amma than.....i am so proud to have a friend like u.
ReplyDeletethank u dear..........
ReplyDelete