உன் இரு விழிகளின்
கருவிழியாகிய நான்
என் இதயத்திற்கு (உனக்கு) எழுதும்
ஓர் ஆசை மடல்........

நீ நலம் என்ற நம்பிக்கையிலேயே
துடித்து கொண்டிருகிறது
என் இதயம்
உன் சுவாசம் தடை பட கூடாதென்றே
இருமடங்கு துடித்து கொண்டிருக்கும்
இதயத்தோடு நான்.........
பின் உன் நலத்துக்கென குறை?????????????
ஆக்சிஜென் குறைந்தாலும்
என் ஆவியில் உயிர்பிப்பேன் உன்னை !!!!
விரல் தொடும் வேளையில்
உயிர் விடும்
காம காதல் அல்ல நம்முடையது..........
இடைவெளி நீண்ட போதும்
இடைவிடாமல் உனை எண்ணும்
என் இதயத்தின் உயிர்காதல்.....
கடிதத்துகாய் வார்த்தை தேடி
ஓடும் வெறும் ஹார்மோன் வேலை அல்ல
நம் நேசம்
அது
உணர்வுகள் கடந்து
உருவங்கள் மறந்து
இரு உள்ளங்கள் மட்டுமே வாழும்
காதல் தேசம்
.
என் நலம் நீ கேட்பாய்
என்றறிவேன் .................
என் இறையாய் நீ வாழும்
இவ்வுடல் என் ஆலயம்
அதில் பழுதொன்றும் இல்லை.
விழுதாய் நீ என்னில்
படர்ந்திருப்பதால் ..............
அப்புறம்
இயல்பு கடிதம் தான்...........
சாப்பிடு (என் நினைவுகளை)
நன்றாய் உறங்கு (என் கனவுகளோடு)
நன்கு படி (நம் காதல் சரித்திரத்தை)
உடம்பை பார்த்து கொள்(உள்ளிருக்கும் என் இதயத்தையும்)
இறுதியாக
என் ஆயுள் வரை நான் சுமக்கும் கரு நீயடா!
ஆனால்
என் மரணம் கூட
உன்னை பிரசவிக்காது
எரிந்த பின்பும்
சாம்பலாய் நின்று
நம் காதலின் சாட்சி சொல்லும்!!!
என்றும் உன் நினைவுகளில்
வாழும் (வாடும்)
சரண்யா...............

No comments:
Post a Comment